இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 21 December, 2019

மார்கழி வெண்பா - 5 - மாலைமாற்று

#மார்கழி 5

வாதைகோ பாடுபாவை நாடுமாத வாநீடு
சோதியாடு தேவைபாய தூயாவா - மாவாயா
தூயபாவை தேடுயாதி  சோடுநீ வாதமாடு
நாவைபாடு பாகோதை வா!

(மாலைமாற்று - பின்பி [palindrome])

(பின்பிருந்து முன்பாகப் படித்தாலும் அப்பாவே வருதல் ‘மாலைமாற்று’ எனப்படும்)



வாதை கோ - வாதவூர் தலைவரான மாணிக்கவாசகர்
பாடுபாவை - பாடும் பாடலை (பாவை - திருவெம்பாவை எனினும் பொருந்தும்)
நாடு - விரும்பி நாடுகின்ற
மாதவா - பெருந்தவத்தோனே (சிவனைக் குறிக்கும்)
நீடு - நீள்கின்ற
சோதி - தீப்பிழம்பாய் / ஒளியாய்
ஆடு தே - ஆடுகின்ற இறைவன் (தே - இறை)
வை - வைகை (கடைக்குறையாய் ‘வை’ என்று நின்றது)
பாய - (உனக்காகப்) பாயச் செய்தான்
தூயா - தூய்மையானவனே
வா - எனக்கருள வா (இதுவரை மாணிக்கவாசகருக்கு, இனி  ஆண்டாளுக்கு)



மாவாயா - (உலகையெல்லாம் அடக்கிக் காட்டிய) பெரிய வாயுடைய கண்ணா,
தூய பாவை - தூய்மையான பெண்ணான ஆண்டாள்
தேடுயாதி - தேடு உய் (ஆதி) - உய்வதற்காகத் தேடும்
(ஆதி) சோடு - முன்பே உண்டான துணைவன் (’சோடி’ என்பது ‘சோடு’ என்று விகாரப்பட்டு நின்றது)
நீ - நீயே,
வாதமாடு - வாதம் செய்கின்ற
நாவை - திருவாயினை (நாவு என்பது ஆகுபெயராய் வாயைக் குறித்தது)
பாடு - போற்றிப் பாடும் (’கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’ என்ற பாடலைக் குறிக்கிறது இது)
பா கோதை - பாடலை உடைய கோதையாகிய ஆண்டாளே
வா - எனக்கருள வா!


பொழிப்பு: மாணிக்கவாசகா, வாதவூரின் கோவே, உன் பாடலை விரும்பும் மாதவனான சிவபெருமான் உனக்காக வைகையைப் பொங்கச் செய்தான், தூயவனே நீ எனக்கருள வா!
திருமாலின் வாதஞ்செய்கின்ற வாயைப் போற்றிப் பாடும் பாடலை உடைய, அவனையே முழுமுதல் துணைவனாக உணர்ந்து அடைந்து உய்யத் தேடிய தூய பெண்ணே, கோதையே, நீ எனக்கருள வா!

நன்றி!

3 comments:

  1. பிஸ்மில்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும்!
    மிகமிக் கடினமான ஒன்றை அனாயசமாக இயற்றியுள்ளீர். அருமை!
    -அமீன், ஆம்பூர்

    ReplyDelete
  2. சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட நறுமணம் மிக்க பாமாலையை இறைவனின் திருவடிகளில் படைத்துள்ளீர்கள். நற்பெயர் பெற்று இத்துறையில் மிளிர என்னுடைய வாழ்த்துகள்!

    ReplyDelete