இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday 26 January, 2011

எனது குடியரசு நாள் செய்தி

குடியரசு அல்லது மக்களாட்சி – உலகின் மிகப்பெரிய மக்களாட்சிதான் அது எப்படி அமையக் கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது... பொய்களைச் சொல்லிக்கொண்டு போலியாய் கொண்டாடுவதைவிட உண்மைகளை ஒப்புக்கொண்டு எதிர்காலத்திலாவது தவறுகளைச் சரி செய்துகொள்வது சிறந்தது என்பது என் கருத்து!

குடியரசு அல்லது மக்களாட்சி என்றதும் நம்மில் பலருக்கு நினைவிற்கு வருவது “சுதந்திரம்” என்ற சொல்தான், குமுகாயப் (சமுதாயப்) பார்வையில் இந்தச் சொல்லின் பொருள் தவறாகவே கொள்ளப்படுகிறது... எது சுதந்திரம்? ஒரு தனிமனிதனோ அல்லது குழுவோ அல்லது நிறுவனமோ தான் நினைத்த எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதா? தன் கடமைகளை முற்றிலும் மறந்துவிட்டு உரிமைகளை மட்டும் இம்மியளவும் குறைவிலாமல் பெற விழைவதா? நிச்சயம் இல்லை!

நண்பர்களே, இந்தியர்களே, குடியரசின் உறுப்பினர்களே... உரிமைகளைக் கேட்கும் முன் கடமைகளைச் செய்து முடிப்போம், நாம் ஒரு பெரும் இயக்கத்தின் சிறு பகுதி என்பதை நினைவில் கொள்வோம், எத்துனை சிறியதானாலும் எத்துனை பெரியதானாலும் நமது பங்களிப்பு இல்லாது அந்தப் பெரிய இயக்கத்தால் சரிவர செயல்பட இயலாது என்பதை மனதில் கொள்வோம்...

வாய்வழியாக வயிற்றுக்கு அளிக்கப்படும் உணவுதான் பின் ஆற்றலாக கைக்கும் பிற உறுப்புக்களுக்கும் கிடைகிறது, வாய்க்கும் வயிற்றுக்கும் நான் ஏன் உணவைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கை நினைத்தால் இழப்பு அதற்கும்தானே? அது போலதான் ஒரு குமுகாயமும், அதன் உறுப்புகளான ஒவ்வொருவரும் அதற்கு அளிக்கும் பங்களிப்பு அவர்களுக்குத் திரும்பி வரும், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ! நமக்கு கிடைத்த கிடைக்காத அனைத்துமே நம் பங்களிப்பின் பயன்தான் என்பதை உணர்வோம்...

உலகின் மிகப்பெரிய குடியரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முன் அது உலகின் மிகச் சிறந்ததூஉம் என்பதையும் உறுதி செய்து கொள்வோம்...

 இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்.... வெல்க குடியரசு! வாழ்க ஞாலம்!!