(மூலப்பாக்களை மேலே தரப்பட்டுள்ள இணைப்பில் கண்டு பொருள் அறிந்து கொள்ளவும். மொழிபெயர்பிற்கு பொருள் அறிய அருஞ்சொற்பொருள் அளித்துள்ளேன், மூலபாடலின் பொருள் தெரிந்திருப்பின் இதற்கு பொருள் கொள்வது எளிதாகும், எனினும் ஐயமிருப்பின் என்னைத் தொடர்புகொள்ளவும்.)
தன் நண்பனான அழகிய இளைஞனை அவனது அழகை சிதையவிடாது சந்ததிகளுக்கு அளிக்குமாறு அறிவுறுத்துவதாய் இந்தப்பாடல் அமைந்துள்ளது.
[பாடலின் யாப்பு : பிரிந்திசைச்துள்ளலோசையான் வந்த பதினான்கடி வெண்கலிப்பா]
உயர்ந்த உயிரினின்றும் உயர்வதேநம் விருப்பமன்றோ(மூலத்தின் அடிஎண்ணிக்கையை மொழிபெயர்ப்பிலும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியால் இறுதியில் சொல்லுக்குச்சொல் என்ற வகையில் அன்றி பொருள் முடிபை மட்டுமே தர இயன்றது. மற்றபடி அடிக்கு அடி பொருள் முடிபைத் தர முயன்றுள்ளேன், அஃதாவது மூல பாடலின் அமைப்பையும் மொழிபெயர்ப்பில் தர முயன்றுள்ளேன். இனி என் முயற்சியின் வெற்றி தோல்விகள் தங்கள் விமர்சனத்தில் முடிவாகும்)
அழகின் மலரென்றும் அழியா திருந்திடவே
எனினும் பழுத்தவன்தான் இறப்பனே காலஞ்செல்ல
இனிதாய் அவநினைவை இளையவர் ஏந்துவரே
நீயோ பிறழ்கின்றாய் நின்னொண்கண் இயல்பதற்கே
தீயோ வளர்கிறது தன்னையே தாந்தின்று
வளமை மிகுந்திருக்க வளர்க்கிறாயே வறுமையைநீ
இளமைக்குக் கொடிதாய் எதிரானாய் உனக்கேநீ
அவனியின் புத்தம்புது அணியாவாய் நீயின்று
உவர்வேனில் வருகைதனை உரைப்பவனும் நீயேதான்
புதைக்கிறாய் உன்சொந்த முகைக்குள்ளே உன்னழகைச்
சிதைக்கிறாய் இளவெழிலைச் சிறுகஞ்சத் தனமதிலே
இரங்குநீ இவ்வுலகிற்கு இல்லையிப் பசிகொள்ளும்
உன்னையும் மரணத்தில் உண்டு.
மறவாமல் கருத்துரை இட்டுச் செல்லுங்கள்... நன்றி!