இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday 20 December, 2019

மார்கழி வெண்பா - 4 - வினாவுத்திரம்

#மார்கழி 4

நரிபரி ஆக்கிய நாடகம் எற்றுக்(கு)
அரிபரி வட்டம் அணிந்து - கரிக்குழாம்
ஓதிய வண்ணம் உடன்வந்த(து) ஏனாம்சொல்?
வாதைகோ தைக்கவிக்(கு) ஆம்!

(நேரிசை வெண்பா; வினாவுத்திரம்)

பாவில் கேள்வி (வினா) எழுப்பி அதற்கு விடை (உத்திரம்) தருதல் ‘வினாவுத்திரம்’ ஆகும்.

நரியைப் பரி (குதிரை) ஆக்கிய நாடகம் (திருவிளையாடல்) எதற்காக நடந்தது?


திருமால் (அரி) பரிவட்டம் அணிந்து (திருமணக்கோலத்தைக் குறிக்கும்) கரி (யானை = வாரணம்) குழாம் (கூட்டம்) சூழ வந்தது ஏன்?


(இரண்டு கேள்விகளுக்கும்) விடை:
வாதைகோதைக் கவிக்கு ஆம்’ என்பதே!

முதல் வினாவின் விடை: ’வாதை கோ தைக் கவிக்கு உவந்து’
‘வாதவூரின் (வாதை) தலைவரான* மாணிக்கவாசகரின் (கோ) உளத்தைத் தைக்கும் (தை) கவிதைக்கு (கவி) ஆக (ஆம்)’ என்றும்,
(அருளாளர்களை அவர்கள் பிறந்த ஊரின் தலைவர் / கோ என்று அழைத்தல் மரபு!)

இரண்டாம் வினாவின் விடை: ‘வாதை கோதைக் கவிக்கு உவந்து’
‘(திருமாலைச் சேராத) துன்பத்தை உடைய (வாதை = துன்பம்) ஆண்டாளின் (கோதை) கவிதைக்கு (கவி) ஆக (ஆம்)’ என்றும் நிற்கும்.

’ஓதிய வண்ணம் உடன்வந்தது’ என்பது
‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான்... கனாக் கண்டேன்...’ என்று ஆண்டாள் பாடியதற்கு ஏற்ப திருமால் கரிக்குழாம் (யானைக் கூட்டம்) உடன் வர வந்தார் என்றது.

No comments:

Post a Comment