இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday 12 February, 2010

என் முதல் கவிதைகள்...

என்ன இருந்தாலும் “முதல்” முதல்தானே...
என் முதல் கவிதைகளும் அப்படித்தான் எனக்கு - வாழ்க்கை முதல் வார்த்தைவரை வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் முதல் காதலை நினைவுபடுத்தும் கால ஆடிகள் என் முதல் கவிதைகள்!

கி.பி.2001-இல் ஒரு விடலைப் பையனின் ஹார்மோன் குளறுபடிகள் உருவாக்கிய கிறுக்கல் கோலங்களைக் காணத் தயாரா?... இதோ...

பெண்ணே,
துப்பட்டா சிறகு விரித்த
உன்னைப் பார்த்துப்
பட்டாம்பூச்சிகள் பொறாமைப்படலாம்...
தேவதைகள் கூடவா?!

நீ உச்சரித்தப் பிறகுதான்
என் பெயரே எனக்குப் பிடித்தது,
நீ உச்சரிக்காமலே
உன் பெயர் பிடிக்கிறதே, எப்படி?!

நான் எவ்வளவுதான் காத்திருப்பது?
இறக்கைகளை மட்டும் அசைக்கின்றன
ஆனால்
பறக்கவே மாட்டேன்கிறதே
உன் விழிப்பட்டாம்பூச்சிகள்!

நான் எவ்வளவுதான் முயன்றாலும்
என் கவிதைகளுக்கு
உன் பெயரைத் தவிர வேறு நல்ல
‘தலைப்பு’க் கிடைக்கவில்லை!

 யார் வரைந்த ஓவியமோ
என
நான் கண்ணிமைக்காமல்
உனைப் பார்த்துக்கொண்டிருக்கையில்
நீ கண்ணிமைத்து
உணர்த்திவிட்டாய் நீ ஓவியமல்ல என்று!

நான்
இயற்பியல் மாணவனாக இருந்தும்,
உன்னைப்
பார்க்கும்பொழுது என்னுள்
வேதியல் மாற்றங்கள்,
நீ என் உயிரியல் என்பதாலா?!

தாய் மடியில் குழந்தையாய்
தூங்கிக் கொண்டிருக்கும்
என் கவிதைகளில்
உன் காதல்...

அன்புடன்,
விஜய், SSLC :-)

Monday 8 February, 2010

தம்பி உடையான்

பிறந்தவுடன் பிரித்துக் கொண்டாய்
அம்மா அப்பா பாசத்தை

வளர வளர வரித்துக் கொண்டாய்
வருவோர் போவோர் கவனத்தை

எனக்கு மட்டுமே இருந்தவைகளில்
உனக்கும் ஒரு பங்கு உண்டானது

விளையாட நான் செல்லும்பொழுதெல்லாம்
விடாமல் வந்து இம்சித்தாய் நீ

உன்னைப் பார்த்துக்கொள்வதில் பலநாள்
என்னைவிட்டு சென்றது என் சுதந்திரம்

என்ன இருந்தாலும் எனக்கு நீ
அண்ணன் என்ற பதவி தந்தவன்

அன்பும் இருக்கிறது உன்னிடம்
அடிக்கடி அது வெளிப்படும்

உன்னைப் பார்த்துக்கொள்வதில் நானும்
வளர்த்துக்கொண்டேன் என் பொறுப்புணர்ச்சியை

விளையாட்டில் என்னோடு ஜோடிசேர
சளைக்காமல் இருந்தாய் நீ என்றும்

என் இரகசியங்களை போட்டுவைக்க
உன் காதுகள் இருந்தன எனக்கு

எத்துனை செய்துள்ளோம் சேர்ந்து நாம்
அத்துனையும் தெரியாதே இன்னும் அம்மாவிற்கு

அடித்தாலும் புடித்தாலும் உன்னை
பிடிக்காமல் போனதில்லை எனக்கு

சண்டையின் நாட்களுக்கு இடையில்
சந்தோஷத்தின் நிமிடங்களும் உண்டே

நீ என் தம்பியே இல்லை!” என்று திட்டியதையும்
நீக்கிவிடுகிறோம் நினைவிலிருந்து எளிதாய்

சண்டை நூல்களில் குறும்பு இழைகள் ஊடிய
நினைவுத் துணியை நெய்து உடுத்தியவர் நாம்

ஆர அமர இருந்து
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து

பலமுறை உன்னையும் பிடிக்காது எனக்கு
சிலமுறை நிரம்ப பிடிக்கும் உன்னை!” என்று

கூச்சத்தில் நெளிந்து பாசத்தில் நெகிழ்ந்து
தடுக்கும் ஆணவத்தை தவிர்த்துவிட்டு சொல்வாய்

புன்னகையில் ஒத்துக்கொள்வேன் நானும்
என் தம்பியாய் நீ கிடைத்தது தவம்தான் என்று!

பி.கு: இந்தக் கவிதைக்கு மட்டுமின்றி என் வாழ்க்கைக்கும் ஒரு கருப்பொருளாய் இருக்கும் என் தம்பி திரு.விக்ரம்-கு இது உரித்து!

Wednesday 3 February, 2010

காதலில் நான் - ஹைக்கூ (வகையில்)

ரவில் சூரியன்
பகலில் நிலா
காதலில் நான்!

தூக்கத்தில் விழிப்பு
விழிப்பில் கனவு
காதலில் நான்!

திங்களில் வீட்டிலிருந்தேன்
ஞாயிறில் வேலைக்குச்சென்றேன்
காதலில் நான்!

னிமையில் பேச்சு
கூட்டத்தில் அமைதி
காதலில் நான்!

ட்டாம்பூச்சி தேவதையாய்
தேவதைகள் பட்டாம்பூச்சியாய்
காதலில் நான்!

சோகத்தில் சிரிப்பு
மகிழ்சியில் அழுகை
காதலில் நான்!

விரலால் எழுதுகிறேன்
பேனாவால் கிறுக்குகிறேன்
காதலில் நான்!

காற்றை காண்கிறேன்
காட்சியை தவறுகிறேன்
காதலில் நான்!

வெயிலில் நனைகிறேன்
மழையில் காய்கிறேன்
காதலில் நான்!

பூமியில் உடல்
ப்ளூட்டோவில் மனம்
காதலில் நான்!

டிகாரம் ஓடுகிறது
காலமோ நிற்கிறது
காதலில் நான்!

'இன்றி'ல் இருந்துகொண்டு
'நேற்றி'ல் வாழ்கிறேன்
காதலில் நான்!

ற்பனை இல்லாதே
கவிதைகள் கருவாகும்
காதலில் நான்!

யாருக்கும் சொல்லாமல்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
காதலில் நான்!

ண்ணில் அவள்
காட்சியில் அவள்
காதலில் நான்!

பட்டாம்பூச்சி நண்பன்

எப்பொழுதோ சிலமுறை கைநீட்டுகையில்
எங்கிருந்தோ வந்தமரும் பட்டாம்பூச்சி ஒன்று
என்னவொரு அழகு என்று நான் மலைத்து
என்னென்ன நிறமென்று எண்ணிமுடிப்பதற்குள்
எட்டாமல் பறந்து கண்ணைவிட்டு மறைந்துவிடும்...

கண்ணில்பட்டு கவனத்தைக் கவரும் நூலொன்று
கருத்துள்ளது என்று என்னைக் கருதிட வைக்கும்
கட்டாயம் வாங்கிப் படித்திட நினைக்கையில்
கைக்குக் கிட்டாமல் காணாது போகும்...

எங்கோ எப்பொழுதோ கேட்டிருப்போம்
என்றும் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
மறந்துவிடுமா அத்தனை எளிதில்
மனதிற்கு பிடித்துவிட்டப் பாடல் என்றால்...

நொடியில் பிரிந்த பட்டாம்பூச்சியாய்
நானின்னும் படிக்காத நல்ல நூலாய்
நண்பா நீ சிலநாட்களில் பிரிந்துவிட்டாலும்
நினைவில் நிலைக்கும் இனிய பாடலாய்
நீங்காது நிற்பாய் என் மனதில்...

எங்கும் போய்விட முடியாது
என் நினைவைவிட்டு நீ
வரும் பல நாட்கள் நாம் மீண்டும் சந்திக்க
வருவேன் அப்பொழுதெல்லாம் நானும்
காத்திருக்கையில் கிறுக்கிய
கவிதைக் கையுறைகளுடன்!