இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 29 May, 2010

வல்லின எதுகை கவிதை

ற்றைக் கருங்குழல்
ற்றைக் கயல்விழி
ற்றைப் பிறைநுதல்
பெற்றைப் பெண்ணிவள் - அழகாமே!

ப்பிக்க இயலாது
ப்பியக் கரிவிழிக்கண்
ப்புவித்தேன் எனை
ப்பொழுது நீதரு - வாயுன்னை!

த்தைக் கனியிதழ்
முத்தைச் சுவைசெய
த்தைத் தவமிருப்பேன்
த்தைப் போல்நெஞ்சை - கடைவோளே!

வெட்டிடும் கூர்விழி
கொட்டிடும் பார்வையில்
ட்டதும் பாழ்மனம்
ட்டியே கொள்ளுதே - பொழுதெல்லாம்!

ச்சைக் கிளியுந்தன்
கொச்சை மொழிவாயின்
ச்சில் சுவைவேண்டும்
ச்சை எனதாமே - தருவாயோ!

க்கணம் எனைவிட்டால்
க்களம் ஏகியுமே
க்கரை பாவையுன்
க்கரை எனதாய் - நானாக்குவேன்!

மதுரையை மீட்ட சுந்தர ”பல்லவன்”

முன்குறிப்பு : என் காதலி பாண்டிய நாட்டவள் (மதுரை), நான் தொண்டை நாட்டவன் (சென்னை) - அவள் தன் ஊருக்கு போயிருந்த சமயம், வந்த பாடல் இது! மழைத்துளிகளைச் சேகரிக்கும் சிறுவன் போல எங்கிருந்தோ பொழிந்த சொற்களை பேனா மூலம் ஒரு வெள்ளைத் தாளில் சேகரித்த பணி மட்டுமே என்னுடையது!

    "Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility”

 -என்று வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னதன் உண்மையை புரிந்த நொடி அது!


மதுரைக்குச் சென்றாயே பெண்ணே

மதுவிறைக்கும் நின்தாமரைக் கண்ணே!

தொண்டைநாடன் எனைவிட்டாய் தனியே

பாண்டி-

கெண்டைவிழி என்றுகாண்பேன் இனியே?


மீனாட்சி கோவுறையும் பதியில்

மீன்ஆட்சிக் கோலுறைந்த கதியில்

தானாட்சி புரிந்திடுமோ கண்கள்

என்னை-

ஏனாட்சி செய்கிறதுன் பெண்-கள்!


சேமறையும் வேளைவரும் கூடல்நிலா

தாமரையும் தானும்சேர்ந்து போகுமுலா

மல்லிகைதன் மணம்பரவும் மாநகரில்

உந்தன்-

அல்லிகைபற்றி அலையும்சுகம் நிகரில்!


பாவையுன் விழிபார்த்து நாணும்

பாண்டியன்தன் கொடிவாழும் மீனும்!

சொல்லாத சுகமெல்லாம் ஈணும்

நிந்தன்-

சொல்லாலே சொக்கிநின்றேன் நானும்!


சொக்கனுக்கு சொந்தமான வானும்

சொர்க்கமுன்மேல் மழைதூவ வேணும்,

கூடல்நகர் கூடிநின்று காணும்

இந்தக்-

கூரழகை கைக்கொள்வேன் நானும்!


முத்தெடுத்த பாண்டியமா கோவும்

நின்பல்லழகை பார்த்ததில்லை பாவம்!

கல்வடித்த பல்லவன்நான் மேவும்

உற்ற-

நல்லழகே மனமுன்பால் தாவும்!


முப்படையால் உலகம்கொண்டான் சோழன்

முத்தமிடும் இதழ்படைக்கு நானே தோழன்,

வில்கொண்டான் படைகொடியில் சேரன்

அவன்-

கல்லாத கலையிடையில் கற்பேன் பாரேன்!


தமிழென்பாள் நான்கொண்ட அன்னை

தவறாமலெனக் கருள்வாள் அவள் உன்னை

நீயின்றி நானில்லை என்னை?

எந்தன்-

உயிரே நீ ஏற்பாயோ என்னை!


(பாடலின் யாப்பைப் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி! )