குறிசொற்கள்
கவிதை
(39)
மரபுக்கவிதை
(25)
வெண்பா
(17)
ஆண்டாள்
(16)
மாணிக்கவாசகர்
(16)
மார்கழி
(16)
வாழ்க்கை
(14)
காதல்
(12)
தமிழ்
(12)
காலம்
(6)
விருத்தம்
(5)
ஹைக்கூக்கள்
(5)
நட்பு
(4)
பாரதியார்
(4)
சிந்து
(3)
திருக்குறள்
(3)
பண்டிகை
(3)
மிறைகவி
(3)
வாழ்த்து
(3)
ஆசிரியப்பா
(2)
கதைப்பாடல்
(2)
சிறுகதை
(2)
திரைப்படம்
(2)
பாசம்
(2)
விமர்சனம்
(2)
Farewell Poem
(1)
Friendship Poem
(1)
அரசியல்
(1)
இடையினப்பா
(1)
இரங்கற்பா
(1)
இரதபந்தம்
(1)
கண்ணதாசன்
(1)
கண்ணன்
(1)
கலிவெண்பா
(1)
கவியரங்கம்
(1)
கிராமம்
(1)
கிருஷ்ண
(1)
கூடசதுர்த்தம்
(1)
சதுரபந்தம்
(1)
சிலேடை
(1)
ஜெயலலிதா
(1)
தமிழ்ப் படம்
(1)
திரை விமர்சனம்
(1)
நாகபந்தம்
(1)
நான்காரைச் சக்கரபந்தம்
(1)
நாற்கூற்றிருக்கை
(1)
நிரோட்டகம்
(1)
நூல்
(1)
பின்பி
(1)
பொங்கல்
(1)
மகாபாரதம்
(1)
மடக்கணி
(1)
மழை
(1)
மாலைமாற்று
(1)
மெல்லினப்பா
(1)
மொழிபெயர்ப்பு
(1)
யமகம்
(1)
வஞ்சி விருத்த
(1)
வல்லினப்பா
(1)
வினாவுத்திரம்
(1)
ஷேக்சுபியர்
(1)
(கா) விஜயநரசிம்மன் 2007-2021
இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)
Thursday 24 March, 2011
மருந்து
எட்டுமணி நேர வேலை
ஏற்படுத்தியிருந்த எரிச்சல்,
காலம் காவாப் பேருந்திற்காய்க்
காத்திருந்ததன் கால்கடுப்பு,
வந்த வண்டியும் கூட்டம்
வழிந்திட வந்ததின் வெறுப்பு,
நிம்மதியாய் நிற்கக்கூட விடாமல்
நெறிக்கப்படுவதின் நெஞ்சுக்கொதிப்பு,
கடந்து போகையில் கால் மிதித்துவிட்டுக்
கண்டு கொள்ளாதவன் மீதான கோவம்,
சாலை நெரிசலில் சவலை மாடாய் வண்டி
தள்ளாடி நகர்வதனாலாய தலைவலி,
இத்தனையும்
இத்தனையும்
மாயமாய் மறைந்தன –
அறிமுகமே இல்லாத
அந்தக் குழந்தையின்
பால்முகம் வீசிய
பச்சைப் புன்னகையால்!
Monday 14 March, 2011
கல்லூரிப் பிரிவு
காலண்டரைக்
கிழிக்காமல் வைத்த
என் கடைசி முயற்சியும்
தோற்றுப்போனது – வந்துவிட்டதே
நாம் பிரியப்போகும்
இந்த நாள்!
பிடித்த பாடல் பிரதிபலிக்கும்
உன் நினைவின் தாக்கத்தில்
என் இதழ் தோன்றும்
நொடிப்புன்னகைக் கேட்கிறது
“என்று சந்திப்பேன்
மீண்டும் உன்னை?” என்று!
பிரிவுக்குத் தயாரானேன்
நினைவுகளை டைரியில் பதித்து,
எவ்வளவுதான் எழுதினாலும்
இடமிருக்கிறது இன்னும்
எழுத முடியாதவற்றை எழுத!
எதிர்பாராத தொலைப்பேசி அழைப்போ
யதேச்சையான வழிப்பாதைச் சந்திப்போ
ஒரு நண்பன் போதுமே – தொட்டுத் தொட்டு
அனைவரின் நினைவையும் அசைபோட;
இரயில் பெட்டிகளாய் இணைந்த நினைவுகள்!
கிழிக்காமல் வைத்த
என் கடைசி முயற்சியும்
தோற்றுப்போனது – வந்துவிட்டதே
நாம் பிரியப்போகும்
இந்த நாள்!
நிறத்திற்கு ஒன்றாய் மிட்டாய்கள்,
கைத்தட்டும் குரங்கு பொம்மை,
அஷ்டகோணலான அப்பாவின் முகம்,
எதற்கும் சமாதானமாகாமல்
தாய் தேடும் குழந்தையாய்
தேடிக்கொண்டிருப்பேன் உன்னை
என்றாவது ஒருநாள்
என் வாழ்க்கையில்...
கைத்தட்டும் குரங்கு பொம்மை,
அஷ்டகோணலான அப்பாவின் முகம்,
எதற்கும் சமாதானமாகாமல்
தாய் தேடும் குழந்தையாய்
தேடிக்கொண்டிருப்பேன் உன்னை
என்றாவது ஒருநாள்
என் வாழ்க்கையில்...
பிடித்த பாடல் பிரதிபலிக்கும்
உன் நினைவின் தாக்கத்தில்
என் இதழ் தோன்றும்
நொடிப்புன்னகைக் கேட்கிறது
“என்று சந்திப்பேன்
மீண்டும் உன்னை?” என்று!
நீ இரவல் வாங்கிய
என் புத்தகம்,
நான் திருப்பித் தராத
உன் பேனா,
வானொலியில் கசியும்
உனக்குப் பிடித்த பாடல்,
நோட்டின் ஓரத்தில்
கிறுக்கிய பெயர்கள்,
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்,
என் கைப்பேசியில் பூக்குமுன்
“நல்லிரவு” குறுஞ்செய்தி...
ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது
உன்னை எனக்கு நினைவூட்ட...
என் புத்தகம்,
நான் திருப்பித் தராத
உன் பேனா,
வானொலியில் கசியும்
உனக்குப் பிடித்த பாடல்,
நோட்டின் ஓரத்தில்
கிறுக்கிய பெயர்கள்,
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்,
என் கைப்பேசியில் பூக்குமுன்
“நல்லிரவு” குறுஞ்செய்தி...
ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது
உன்னை எனக்கு நினைவூட்ட...
பிரிவுக்குத் தயாரானேன்
நினைவுகளை டைரியில் பதித்து,
எவ்வளவுதான் எழுதினாலும்
இடமிருக்கிறது இன்னும்
எழுத முடியாதவற்றை எழுத!
என்றோ எதையோ
தேடும் பொழுதில்
கிடைப்பதற்காகவே வைத்திருப்பேன்
அலமாரி புத்தகத்தின் நடுவில்
நண்பா, நம் புகைப்படத்தை...
தேடும் பொழுதில்
கிடைப்பதற்காகவே வைத்திருப்பேன்
அலமாரி புத்தகத்தின் நடுவில்
நண்பா, நம் புகைப்படத்தை...
எதிர்பாராத தொலைப்பேசி அழைப்போ
யதேச்சையான வழிப்பாதைச் சந்திப்போ
ஒரு நண்பன் போதுமே – தொட்டுத் தொட்டு
அனைவரின் நினைவையும் அசைபோட;
இரயில் பெட்டிகளாய் இணைந்த நினைவுகள்!
Subscribe to:
Posts (Atom)