இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 11 December, 2016

முண்டாசுக் கவிக்கென் முகமன்

இன்று பாரதியின் பிறந்தநாள்... பாரதி என்பதைவிட பாரதீ என்றால் பொருந்தும்...

‘எப்படி எழுதினார்
நெருப்புக் கவிதைகளை
காகிதம் கருகாமல்?’
-என்று என்றோ வியந்துவிட்டேன்...



இன்று, இந்தச் சிந்து:


 சொற்களில் எரிந்திட்ட தீ - சுடர்ச்
...சுதந்திர தாகத்தைத் தூண்டிய தீ,
பற்பல புதுமைகளை - நல்ல
...பழகு தமிழிற்குப் பழக்கிய தீ,
அற்பரை வாட்டிய தீ - நல்ல
...ஆன்றோர் உளவிளக்கேற்றிய தீ,
கற்றிடும் போதெல்லாம் - எனைக்
...கனலென ஆக்கிடும் பார் இந்தத் தீ...

யார் இந்தத் தீ? - வேறு
யார் இந்தத் தீ?

பார் அத் தீ - நம்
பாரதீ...

முண்டாசுக் கவிக்கென் முகமன்...

ஒரு சரித்திரம் சகாப்தமாகியது - அம்மாவிற்கு அஞ்சலி

[தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா காலமான செய்தி அனைவரையுமே உலுக்கியது. எதிரிகள் கூட எதிர்ப்பார்க்கவில்லை என்றனர். எந்தக் கட்சியிலும் சாராத ஒரு சாதாரனத் தமிழனாய் என் உள்ளத்தில் பொங்கிய வரிகள் இவை... என் பேனா மூலம் அழப்பட்ட கண்ணீர்த்துளிகள்...]

அரசியல் அழுக்குகளை
அலம்பிவிட்டது மரணம்,
அக்கிரமங்களை எல்லாம்
மன்னித்தோ மறந்தோவிட்டோம்...

இனி
மனக்கண்ணில் மிஞ்சுவதெல்லாம்
எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் மீறி
அரியணை ஏறி
அஞ்சாது ஆண்ட
வீரப் பெண்மையின்
பெருமித சித்திரம்தான்...

அம்மா அம்மா என்று
அண்டியவர் அழைத்தபடி
அம்மாவாகத்தா ஆண்டார்
தன்
அலமாரிகளை நிரப்பிய பின்னர்,
நிரப்பியது நெருடிய பின்னர்...

தமிழ்நாட்டின் வரலாற்றில்
இவருக்கு உண்டு ஒரு அத்தியாயம்
நான் கண்ட தமிழ்நாட்டின்
இருபெரும் முதல்வரில் ஒருவர்...

ஹிந்திய முதலைகள்
தமிழ்நாட்டை விழுங்காமல் காத்ததில்
இவருக்கும் பங்குண்டு,
இனி
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையில்
இவருக்கும் பள்ளியுண்டு...

அரசியல் அழுக்குகளை
அலம்பிவிட்டது மரணம்...

பற்றுகொண்டு பதறினாலும்
பார்வையாளனாய் நின்றாலும்
பகைவனாய் பார்த்தாலும்,

சில துளி கண்ணீரை
சிந்தத்தான் செய்கிறது நெஞ்சு...

இதுவரை எங்களை ஆண்ட
இரும்புப் பெண்ணே கண்ணுறங்கு...

இதுவரை பட்டவை போதும்,
இனியேனும் நிம்மதியாய் கண்ணுறங்கு...

அம்மாவிற்கு என் அஞ்சலிகள் / 06.12.2016

Saturday 16 January, 2016

பொங்கலோப் பொங்கல்

கரும்புகள் அடுக்கி வைத்து - மண்
.....கலத்திலே மஞ்சள் கட்டி
விரும்பிய புதுநல் அரிசி - உடன்
.....வெல்லமும் அளவில் இட்டு
மங்கல அடுப்பில் வைக்க - அது
.....மணத்தொடு பொங்கும் நேரம்
பொங்கலோப் பொங்கல் என்று - நாம்
.....போற்றியே வாழ்த்து வோமே!

அந்தப் பொங்கல் போல்-

வீடெல்லாம் மகிழ்வு பொங்க
.....வீதியெலாம் கோலம் பொங்க
நாடியநல் வளங்கள் பொங்க
.....நட்பொடுவுள் அன்பும் பொங்கத்
தேடியசெல் வங்கள் பொங்கத்
.....தெய்வத்தின் அருளும் பொங்கக்
கூடியவித் திருநாள் அதனில்
.....கூறினோம்யாம் கோடி வாழ்த்தே!

Monday 11 January, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

நாட்காட்டி புதிதாய் மாறும்
...........நாளிதில் புதுநல் ஆண்டில்
வாழ்விலே எல்லா நலமும்
...........வளங்களும் வாய்க்க வென்றும்
ஆழ்கதீ குணமும் செயலும்
...........ஆக்கமே ஓங்க வென்றும்
ஆண்டவன் அடிகள் தொழுது
...........ஆசிகள் மொழிவாம்! வாழி!

[ஆறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

[கொஞ்சம் தாமதமாய் இடுவதற்கு... ஹி ஹி!]