இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 15 July, 2010

உண்மை...


ஏன் தொலைகிறது
அந்நியத்தோடு செர்ந்து
ஆர்வமும்?

கனி இதழும்
கசக்கிறது அவள்
பேசத் துவங்கியதும்!

பேசியும் கொல்கின்றன
பேசாமலும் கொல்கின்றன - அன்று
பேசவைத்த இதழ்கள்!

கருவண்டு விழிகள்
கலங்க வைக்கின்றன இன்று
கேள்விகளோடு நோக்கையில்!

வானவில் புருவங்கள்
வயிற்றைக் கலக்குகின்றன
அவள் மௌனத்தில் உயர்ந்து!

செல்லமான அடிகள்
சீறிப் பாய்கின்றன
இன்று!

கொலுசிற்கும் வளையலுக்குமான சண்டையில்
கொலையுண்டு கிடக்கிறது
குற்றமற்ற என் பேனா!

காதலைத்
துரத்திவிட்டதா
காலத்தின் மாற்றம்?

அவளைப் பற்றி எழுதும்
அவளுக்கான கவிதையை
அவளே கெடுக்கிறாள்!

எல்லா தவறுகளும்
என் பொறுப்பிலேயே
ஏன் வந்து சேர்கின்றன?

கடவுளே... இந்தக்
கவிதைகளை என்
காதலி படித்துவிடக் கூடாது!

இதுதான் காதல் என்றாலும்
இன்னும் ஆயிரம் ஆண்டு
இதில் இன்பமாய் வாழ்வேன்...

வேண்டும் ஓர் காஸ்ட்ரோ!

கடந்த மாதம் படிக்கத் துவங்கி, பின் பாதியில் நிறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் படிக்கத் துவங்கிய கிழக்கு பதிப்பகத்தின் “சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ” நூலை நேற்றுதான் படித்து முடித்தேன், ஃபிடலைப் படித்தவுடன் இன்றைய இந்தியாவின் நிலை ஏறத்தாழ அன்றைய க்யூபாவின் நிலையிலிருந்து சற்றும் வேறானதல்ல என்ற ஒரு கருத்து தோன்றியது, அதன் விளைவு இந்தக் கவிதை (என்று நான் நினைக்கும் சொற்கோவை!) படித்துப் பாருங்கள், தோன்றுவதை தோன்றிய வண்ணம் சொல்லிவிட்டு போங்கள்...

ர்வாதிகாரம் இல்லை
ஆனால்
சர்வத்திற்கும் அதிகாரம் உண்டு,

பொருளாதாரத் தடை இல்லை
எந்தப்
பொருளையும் வாங்கப் பொருளில்லை,

அந்நிய செலாவனிக்கு குறைவில்லை
பலருக்கு
அன்றாட உணவுக்கே வழியில்லை,

கல்வி சாலைகளில் குறைவில்லை
கிடைக்கும்
கல்வி அதனில் தரமில்லை,

உடலைப் பேண மருந்தில்லை
ஏழை
உயிருக்கு இங்கே மதிப்பில்லை,

உழைப்பவருக்கு உயர்வில்லை
வளரும்
ஊழல் அதற்குத் தடையில்லை,

காலனி ஆதிக்கம் இன்றில்லை
நடக்கும்
களவானி ஆட்சிக்கு முடிவில்லை,

முதலாளித்துவம் இங்கில்லை
எனநம்பும்
முட்டாள்களுக்கும் குறைவில்லை,

நடக்குது ஒர் மக்களாட்சி
மக்களை
கொண்டல்ல அவரைக் கொன்று,

இது க்யூபா அல்ல
இருந்தும்
இங்கும் வேண்டுமோர் காஸ்ட்ரோ!


முட்டாள்தனம் - ஹைக்கூ

ஃபிடலைப் படித்துவிட்டு
பேனாவைத் தேடுகிறேன்
போர்வாளை விட்டுவிட்டு!


நூலைப் படித்துப் பாருங்கள்...
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்