இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday 27 December, 2019

மார்கழி வெண்பா - 11 - மெல்லினப்பா

#மார்கழி 11

ஞானமே நண்ணி நமனண்ணி னானைநன்
நாமமே நண்ணி மணமொண்ணும் - மானைநான்
நண்ணினேன் மேன்மை நனிமன்ன மண்ணாணி
விண்ணினை நண்ணமன மே!

(நேரிசை வெண்பா; மெல்லினப்பா)

பதம் பிரித்து:
ஞானமே நண்ணி நமன் நண்ணினானை,
நன்நாமமே நண்ணி மணம் ஒண்ணும் மானை நான்
நண்ணினேன், மேன்மை நனி மண்ண, மண் நாணி
விண்ணினை நண்ண மனமே.

பொருள்:
ஞான மார்கத்தை (ஞானமே) விரும்பி (நண்ணி) குருவாய் சிவனை (நமன்) பொருந்திய மாணிக்கவாசகனையும் (நண்ணினானை),
திருமாலின் நல்ல நாமத்தை (நன் நாமம்) விரும்பி (நண்ணி) அவனையே திருமணம் (மணம்) செய்துகொண்டவளான (ஒண்ணும்) மான் போன்ற ஆண்டாளையும் (மானை)
நான் விரும்பிப் பொருந்தினேன் (நண்ணினேன்), இவ்வுலக வாழ்வை ஒதுக்கி (மண் நாணி) உயர்வான குணங்களை அடையவும் (மேன்மை நனி மன்ன), முத்தி அடையவும் (விண்ணினை நண்ண), என் நெஞ்சே (மனமே).


பொழிப்பு: மனமே, நான் இவ்வுலக வாழ்வை ஒதுக்கி, மேன்மை பெற்று, முத்தி பெற விழைந்து, நால்வகை மார்கத்துள் ஞான மார்கத்தைப் பொருந்தித், தனது குருவாய் சிவனை அடைந்த மாணிக்காவாசகரையும், நாமத்தைத் துதித்துத் திருமாலை கணவனாய் அடைந்த ஆண்டாளையும் பொருந்தி வழிபடுகிறேன் (எ-று).

நண்ணுதல் - பொருந்துதல், விரும்புதல்.
நமன் - ’நம்மவன்’, ‘நம் தலைவன்’ என்ற பொருளில் சிவனைக் குறித்தது (’நமர்’ என்று பன்மையில் சொல்வதைப் போல, ஒருமையில் ‘நமன்’ எனப்பட்டது!)
நாமம் - பெயர். அது புகழையும் (வைபவம்) குறிக்கும்.
மான் - உவமையாகுபெயர்.
மேன்மை - பண்பாகுபெயர் (மேன்மையான குணங்கள் ‘மேன்மை’ எனப்பட்டன).
மண் - இடவாகுபெயர் (உலகில் வாழ்வதாகிய வாழ்வை ‘உலகு’ என்ற பொருள்தரும் சொல்லால் குறித்தனம்).
விண் - இதுவுமது.

’ங், ஞ், ண், ந், ம், ன்’ ஆகிய மெல்லின எழுத்துகளும், அவற்றின் வரிசையான உயிர்மெய்களும் மட்டுமே பயின்று வருவதால் இது மெல்லினப்பா ஆயிற்று. (இப்பாவில் ‘ங்’ இடம்பெறவில்லை!)

நன்றி.

(C) 2019, Vennkotran. 

No comments:

Post a Comment