என் முதல் கவிதைகளும் அப்படித்தான் எனக்கு - வாழ்க்கை முதல் வார்த்தைவரை வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் முதல் காதலை நினைவுபடுத்தும் கால ஆடிகள் என் முதல் கவிதைகள்!
கி.பி.2001-இல் ஒரு விடலைப் பையனின் ஹார்மோன் குளறுபடிகள் உருவாக்கிய கிறுக்கல் கோலங்களைக் காணத் தயாரா?... இதோ...
பெண்ணே,
துப்பட்டா சிறகு விரித்த
உன்னைப் பார்த்துப்
பட்டாம்பூச்சிகள் பொறாமைப்படலாம்...
தேவதைகள் கூடவா?!
நீ உச்சரித்தப் பிறகுதான்
என் பெயரே எனக்குப் பிடித்தது,
நீ உச்சரிக்காமலே
உன் பெயர் பிடிக்கிறதே, எப்படி?!
நான் எவ்வளவுதான் காத்திருப்பது?
இறக்கைகளை மட்டும் அசைக்கின்றன
ஆனால்
பறக்கவே மாட்டேன்கிறதே
உன் விழிப்பட்டாம்பூச்சிகள்!
நான் எவ்வளவுதான் முயன்றாலும்
என் கவிதைகளுக்கு
உன் பெயரைத் தவிர வேறு நல்ல
‘தலைப்பு’க் கிடைக்கவில்லை!
யார் வரைந்த ஓவியமோ
என
நான் கண்ணிமைக்காமல்
உனைப் பார்த்துக்கொண்டிருக்கையில்
நீ கண்ணிமைத்து
உணர்த்திவிட்டாய் நீ ஓவியமல்ல என்று!
நான்
இயற்பியல் மாணவனாக இருந்தும்,
உன்னைப்
பார்க்கும்பொழுது என்னுள்
வேதியல் மாற்றங்கள்,
நீ என் உயிரியல் என்பதாலா?!
தாய் மடியில் குழந்தையாய்
தூங்கிக் கொண்டிருக்கும்
என் கவிதைகளில்
உன் காதல்...
அன்புடன்,
விஜய், SSLC :-)
SSLC கவிதைகளா.... பரவாயில்லையே! ரொம்ப நல்லா இருக்கு. இந்த வயசுல எழுத வேண்டியவைகளை அப்பவே எழுதியிருக்கீங்க. என் வயசு ஆகிறப்ப சாமியார் ஆயிடுவீங்களோ? :-)
ReplyDeleteஎன் கவிதைகள் பெரும்பாலும் மரபை ஒட்டியே இருந்தன. புதுக்கவிதை முதலில் எழுதியது கல்லூரி முதல் வருடத்தில் தான்.
கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர்
அதற்கப்புறம் நிறைய எழுதியாகிவிட்டது. சேமிக்கவில்லை. மறந்து விட்டன.