இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday 3 February, 2010

பட்டாம்பூச்சி நண்பன்

எப்பொழுதோ சிலமுறை கைநீட்டுகையில்
எங்கிருந்தோ வந்தமரும் பட்டாம்பூச்சி ஒன்று
என்னவொரு அழகு என்று நான் மலைத்து
என்னென்ன நிறமென்று எண்ணிமுடிப்பதற்குள்
எட்டாமல் பறந்து கண்ணைவிட்டு மறைந்துவிடும்...

கண்ணில்பட்டு கவனத்தைக் கவரும் நூலொன்று
கருத்துள்ளது என்று என்னைக் கருதிட வைக்கும்
கட்டாயம் வாங்கிப் படித்திட நினைக்கையில்
கைக்குக் கிட்டாமல் காணாது போகும்...

எங்கோ எப்பொழுதோ கேட்டிருப்போம்
என்றும் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
மறந்துவிடுமா அத்தனை எளிதில்
மனதிற்கு பிடித்துவிட்டப் பாடல் என்றால்...

நொடியில் பிரிந்த பட்டாம்பூச்சியாய்
நானின்னும் படிக்காத நல்ல நூலாய்
நண்பா நீ சிலநாட்களில் பிரிந்துவிட்டாலும்
நினைவில் நிலைக்கும் இனிய பாடலாய்
நீங்காது நிற்பாய் என் மனதில்...

எங்கும் போய்விட முடியாது
என் நினைவைவிட்டு நீ
வரும் பல நாட்கள் நாம் மீண்டும் சந்திக்க
வருவேன் அப்பொழுதெல்லாம் நானும்
காத்திருக்கையில் கிறுக்கிய
கவிதைக் கையுறைகளுடன்!

1 comment:

  1. நல்ல பொருத்தமான உவமைகள். ஆனால் சொற் சிக்கனம் வேண்டும். பழகுங்கள்.

    ReplyDelete