(”ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா” மெட்டைச் சுட்டு அதில் போட்ட பாடல். பாரதியிடமிருந்து
சுடுவது பெருமையே எனக்கு!)
தமிழனென்னத் தயங்குவாய் போ! போ! போ!
தன்பெருமை அறிந்திலாய் போ! போ! போ!
தாழ்மையை விரும்புவாய் போ! போ! போ!
தாய்மொழி கற்கிலாய் போ! போ! போ!
மானமென்ப தறிகிலாய் போ! போ! போ!
ஈனச்செயல்கள் புரிகுவாய் போ! போ! போ!
மேற்கைக்கண்டு மயங்குவாய் போ! போ! போ!
மேன்மைமீட்க முயன்றிலாய் போ! போ! போ!
தமிழினை விரும்புவாய் வா! வா! வா!
திராவிடம் உயர்த்துவாய் வா! வா! வா!
இலக்கியங்கள் போற்றுவாய் வா! வா! வா!
இலக்கணங்கள் தேறினாய் வா! வா! வா!
வள்ளுவத்தின் நெறிகளை - நன் றா க
கற்றுநின்று வாழ்குவாய் வா! வா! வா!
கம்பன்சேரன் யாத்தளித்த - மா நூல் கள்
கலக்கமின்றி கற்றுநீ வா! வா! வா!
உள்ளவுயர் வனைத்தையும் - தா ழா து
உலகெலாம் சாற்றிட வா! வா! வா!
உயிரும்வாழ்வும் தமிழென்றே வா! வா! வா!
ஒன்றுகூடி உயருவோம் வா! வா! வா!
வாழ்க தமிழ்...
வளர்க ஞாலம்...
தமிழனென்னத் தயங்குவாய் போ! போ! போ!
தன்பெருமை அறிந்திலாய் போ! போ! போ!
தாழ்மையை விரும்புவாய் போ! போ! போ!
தாய்மொழி கற்கிலாய் போ! போ! போ!
மானமென்ப தறிகிலாய் போ! போ! போ!
ஈனச்செயல்கள் புரிகுவாய் போ! போ! போ!
மேற்கைக்கண்டு மயங்குவாய் போ! போ! போ!
மேன்மைமீட்க முயன்றிலாய் போ! போ! போ!
தமிழினை விரும்புவாய் வா! வா! வா!
திராவிடம் உயர்த்துவாய் வா! வா! வா!
இலக்கியங்கள் போற்றுவாய் வா! வா! வா!
இலக்கணங்கள் தேறினாய் வா! வா! வா!
வள்ளுவத்தின் நெறிகளை - நன் றா க
கற்றுநின்று வாழ்குவாய் வா! வா! வா!
கம்பன்சேரன் யாத்தளித்த - மா நூல் கள்
கலக்கமின்றி கற்றுநீ வா! வா! வா!
உள்ளவுயர் வனைத்தையும் - தா ழா து
உலகெலாம் சாற்றிட வா! வா! வா!
உயிரும்வாழ்வும் தமிழென்றே வா! வா! வா!
ஒன்றுகூடி உயருவோம் வா! வா! வா!
வாழ்க தமிழ்...
வளர்க ஞாலம்...
இதனைப் பாடியும் இட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்! :-)
ReplyDeleteநல்ல பாடல். யாமறிந்த புலவரிலே என்று பாரதி பட்டியல் இட்ட மூவரையும் சொல்லியிருக்கிறீர்கள். இளங்கோவை சேரன் என்றது புதுமை. புரிய ஒரு நொடி ஆனது. :-)
word verificationஐ நீக்கும்படி வேண்டுகிறேன். தொந்தரவாக இருக்கிறது.
ReplyDelete