இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Monday 8 February, 2010

தம்பி உடையான்

பிறந்தவுடன் பிரித்துக் கொண்டாய்
அம்மா அப்பா பாசத்தை

வளர வளர வரித்துக் கொண்டாய்
வருவோர் போவோர் கவனத்தை

எனக்கு மட்டுமே இருந்தவைகளில்
உனக்கும் ஒரு பங்கு உண்டானது

விளையாட நான் செல்லும்பொழுதெல்லாம்
விடாமல் வந்து இம்சித்தாய் நீ

உன்னைப் பார்த்துக்கொள்வதில் பலநாள்
என்னைவிட்டு சென்றது என் சுதந்திரம்

என்ன இருந்தாலும் எனக்கு நீ
அண்ணன் என்ற பதவி தந்தவன்

அன்பும் இருக்கிறது உன்னிடம்
அடிக்கடி அது வெளிப்படும்

உன்னைப் பார்த்துக்கொள்வதில் நானும்
வளர்த்துக்கொண்டேன் என் பொறுப்புணர்ச்சியை

விளையாட்டில் என்னோடு ஜோடிசேர
சளைக்காமல் இருந்தாய் நீ என்றும்

என் இரகசியங்களை போட்டுவைக்க
உன் காதுகள் இருந்தன எனக்கு

எத்துனை செய்துள்ளோம் சேர்ந்து நாம்
அத்துனையும் தெரியாதே இன்னும் அம்மாவிற்கு

அடித்தாலும் புடித்தாலும் உன்னை
பிடிக்காமல் போனதில்லை எனக்கு

சண்டையின் நாட்களுக்கு இடையில்
சந்தோஷத்தின் நிமிடங்களும் உண்டே

நீ என் தம்பியே இல்லை!” என்று திட்டியதையும்
நீக்கிவிடுகிறோம் நினைவிலிருந்து எளிதாய்

சண்டை நூல்களில் குறும்பு இழைகள் ஊடிய
நினைவுத் துணியை நெய்து உடுத்தியவர் நாம்

ஆர அமர இருந்து
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து

பலமுறை உன்னையும் பிடிக்காது எனக்கு
சிலமுறை நிரம்ப பிடிக்கும் உன்னை!” என்று

கூச்சத்தில் நெளிந்து பாசத்தில் நெகிழ்ந்து
தடுக்கும் ஆணவத்தை தவிர்த்துவிட்டு சொல்வாய்

புன்னகையில் ஒத்துக்கொள்வேன் நானும்
என் தம்பியாய் நீ கிடைத்தது தவம்தான் என்று!

பி.கு: இந்தக் கவிதைக்கு மட்டுமின்றி என் வாழ்க்கைக்கும் ஒரு கருப்பொருளாய் இருக்கும் என் தம்பி திரு.விக்ரம்-கு இது உரித்து!

2 comments:

  1. என் தம்பிக்கிட்டயும் இதைச் சொல்லணும் போல இருக்கு. இப்ப என் பொண்ணு அவ தம்பியைப் பாத்து இதைச் சொல்வாளோ என்னவோ?! அதுவும் முக்கியமா இந்த பொறுப்புணர்வால வர்ற சுதந்திரப் பறிப்பு! அவளுக்கு பிடிக்கவே இல்லை அது.

    ReplyDelete