இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 21 March, 2021

தவமா? தரிசனமா?

நேரிசைக் கலிவெண்பா


சொற்கள் தமையடுக்கிச் சொன்ன தளைகட்டி

நிற்பர் கவிதை நிரப்புவர் - சிற்பி


சிலைதன்னை ஊன்றிச் செதுக்குதல் போலே

பலகாலம் நோற்றேபா யாப்பர் - உலகோரும்


நன்றென்னும் அந்த நறுஞ்சொல்லைக் கேட்கவே

என்றென்றும் நெஞ்சத்தில் ஏங்குவர் - ஒன்றே


தொழிலென்று கொண்டே தொழில்படுவர் பாட்டில்

எழில்கொண்டு வந்திடவே எண்ணிப் - பொழில்தேடிச்


சோலை வனந்தேடிச் சொல்லா இடந்தேடிக்

காலை இரவென்று பாராமல் - மூளையும்


தொந்திரவில் லாமல் தொழில்பட வேண்டியே

தந்திரங்கள் செய்யத் தலைப்படுவர் - மந்திரம்போல்


இத்தனை செய்தும் இரங்காத இன்கவி

சித்தெனத் தோன்றும் சிறுநொடியில் - அத்தனையும்


சாலமோ மாயமோவெண் தாமரை யாள்தந்த

சீலமோவென் றெண்ணிச் சிலிர்க்கையிலே - நாளும்


இருந்த தவத்திற் கிரங்காதே இன்றோர்

அரிய நொடியில் அருளேன்? - புரிய


முடியாத மாய முழுமுதலோ? ஊன்றிப்

படியாத எந்தன் பவமோ? - அடியார்தம்


அன்பிற் கிளகுமவ் ஆண்டவன்போல் பாட்டும்நம்

என்பில் உருகி எழுவதோ? - என்றால்


அவனியிலே வெண்பா அடுக்குபவ ரெல்லாம்

தவமிருந்து பெற்ற தரமோ? - நவநவமாய்ச்


சாற்றுகின்ற பாக்கள் தனிவரமோ? ஓர்நொடியில்

ஊற்றெடுக்கும் உண்மைத் தரிசனமோ? - மாற்றுரைக்க


யாரும் இருக்காத ஏகாந்த வேளையிலே

ஊறும் இதற்கோர் உரை!


-வெண்கொற்றன் @ விசயநரசிம்மன்


(C)2017, Vijayanarasimhan.

All rights reserved. If you share the post please keep this credit intact. Thank you.


No comments:

Post a Comment