இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday 1 January, 2020

மார்கழி வெண்பா - 16 - சதுரபந்தம்

#மார்கழி 16

வாரணத் தேறியே தேறிட வந்தேற்ற
மாரனத்த னீய வகுதே வணங்கத்தாள்
சத்து வரகவி யின்தபாதே யாற்றிடுவான்
பத்துநீ வாசகத்தேன் பா!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா; சதுரபந்தம்)

பதம் பிரித்து:
வாரணத்து ஏறியே தேறிட வந்து ஏற்றம்
மாரன் அத்தன் ஈய வகு தே வணங்கு; அத்தாள்
சத்து வரகவியின் த(ப்)பாதே ஆற்றிடுவான்
பத்து நீ வாசகத் தேன் பா (வாசு அக தேன் பா).

பொருள்:
மன்மதனின் (மாரன்) தந்தையான திருமால் (அத்தன் = தந்தை) யானை (வாரணம்) மீது வந்து (ஏறியே வந்து) தான் ஆறுதல் கொள்ளும்படி (தேறிட) உயர்வு (ஏற்றம்) தரும்படி (ஈய) விதிசெய்துகொண்ட (வகு) தெய்வத்தை (தே; = ஆண்டாள்) வணங்கிச் சேர (வணங்கு) [அவள் அருளிய இனிய பாக்களான திருமொழியைப் பற்று = பத்து வாசு அக தேன் பா]
உண்மையாகிய (சத்து) இறைவனின் திருவடிளில் (அத்தாள்) நம்மைப் பிழையாது (தப்பாது) உய்யச் செய்பவரை (ஆற்றிடுவான் = மாணிக்கவாசகர்) சேர்ந்திட (பத்து) மனமே (நீ) திருவாசகம் என்னும் (வாசக) இனிய பாவை (தேன் பா) பிடித்துக்கொள் (பத்து).


விளக்கம்:
’வாசகத் தேன்பா’ என்பது நேர் பொருளின் திருவாசகத்தையும்,
‘வாசு அக தேன் பா’ என்று பிரிந்து நின்று (திருமாலின் உளத்திற்கு இனிதான பா) என்று ஆண்டாளின் திருமொழியையும் குறிக்கும்.
மாரனத்தன் = திருமால் மன்மதனின் தந்தை என்று சில புராணங்களில் உள்ளது (மன்மதனின் தந்தை என்று பிரம்மாவும் சொல்லப்படுகிறார். பிரம்மாவின் தந்தை திருமால், எனவே ‘அத்தன்’ என்பதை அவ்வகையிலும் பொருள்கொள்ளலாம்!)

சதுரபந்தம்:
ஏழுக்கேழு கட்டம் கொண்ட சதுரத்தில் இப்பா அடங்கும். சதுரத்தின் இடமேல் மூலையில் தொடங்கி நேரெதிர் மூலை (வலக்கீழ் மூலை) வரைச் சென்று, பின் சிற்சிறு சதுரமாக (படிக்கட்டைப் போல்) ஏறியிறங்கி இடக்கீழ் மூலைக்கு வந்து நேரெதிராய் வலமேல் மூலைக்குச் செல்ல இவ்வெண்பா சரியாகும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது!

இனிய காலை வணக்கம்...

நன்றி!

(C)2019, Vennkotran.

No comments:

Post a Comment