இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 19 February, 2017

ஹைக்குறள் #39 இறைமாட்சி

பொருட்பால் / அதிகாரம் 39 / இறைமாட்சி

#haiKUral

உறுப்புகள் ஆறும்*
இருக்குமோர் அரசனே
சிறப்பான் சிங்கமென. (381)

அச்சமின்னை, கொடை,
அறிவு, ஊக்கம்
கொச்சைப்படாமை அரசர் குணம்.  (382)

தளராமை, கல்வி,
முடிவெடுக்கும் உறுதி
நிலனாள்பவர்க்கு நிலை. (383)

அறத்தினைக் காத்தலும்
அல்லாதவை நீக்கலும்
மறத்தைப் பேணலும் அரசர் மானம். (384)

பொருளைப் பொறுப்போடு
நால்வகையும் ஆள்பவரே
நல்ல அரசர். (385)

நெருங்க எளியவன்
பழக இனியவன் என்றால்
பெருகும் அம்மன்னன் புகழ்! (386)

இனிக்கப் பேசி
ஈகை செய்யும் அரசன்
நினைத்தபடி நிற்கும் உலகம். (387)

கடமை அறிந்து
காப்பாற்றும் மன்னவன்
கடவுள் எனப்படுவான்! (388)

கசப்பான சொல்லுக்கும்
காதுகொடுக்கும் வேந்தன்
வசப்பட்டிருக்கும் உலகம். (389)

அன்போடு அருளோடும்
அறத்தோடும் ஆள்பவன்
மன்னருக்கே ஒரு விளக்கு! (390)





*ஆறு உறுப்புகள் (அங்கம்): படை, குடி (மக்கள்), கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியன. இவற்றிற்கெல்லாம் தனித்தனி அதிகாரங்களே அமைத்துள்ளார் திருவள்ளுவர்.

முந்தைய ஐந்தைவிட பிந்தைய ஐந்தும் ஹைக்கூவிற்கு கொஞ்சம் அருகில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது... உங்கள் கருத்துகளையும் உரைக்கவும்... நன்றி!

1 comment: