இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday 17 February, 2017

ஹைக்கூ குறள் - ஒரு முயற்சி #1

மு.கு.: முன்குறிப்பு நீண்டதால் பின்குறிப்பாகத் தரப்படுகிறது. நன்றி :)

ஹைக்கூ குறள்

திருக்குறள் / அறம் / கடவுள் வாழ்த்து

எழுத்துகளின் முதல் அகரம்
உலகின் முதல்
இறைவன் (1)

தூய அறிவுடையோன்
தாள் தொழாமல்
ஆவதென்ன கற்று? (2)

மலர்மேல் நடந்தவனை
மனத்தில் பதித்தவர்
நிலமேல் நீடிப்பர்! (3)

தேவை தேவையின்மைகள்
தேவைப்படாதவனைத்
தேர்ந்தவர்க்கு இல்லை துன்பம்! (4)

தூயவன் புகழை
வாயுரைப்பார்க்குப்
பாழ்வினைப் பாடுகள் இல்லை! (5)

புலனை வென்றவன்
நிலையில் நின்றவர்
நிலைபெறுவார் உலகில்! (6)

ஒப்புமை இல்லானைச்
சிக்கெனப் பிடித்தால்
எக்கவலை வரும்? (7)

அறத்தின் கடலாம்
அந்தணன் சேர்ந்தார்
பிறவி அறுப்பர். (8)

எட்டு குணத்தானை
ஏற்காதார் தலை
கட்டை, வெறும் கட்டை! (9)

பிறவிக் கடல் நீந்த
உறவுப் படகொன்றே -
இறைவன் அடி! (10)

பி.கு. ஆகிய மு.கு.: 
”திருக்குறளுக்கு ஹைக்கூ உரை இருக்கா?”

என்று என்னை ஒருத்தி கேட்டாள்...

எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றேன்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய உரை அவருக்கே உரிய பாணியில் சுருக்காமானதாக இருக்கும். பழைய உரைகளில் மணக்குடவர் உரையும் சுருக்கமானது.
ஆனால், ஹைக்கூ? ம்ஹூம்!

சரி நாமே ஏன் முயலக் கூடாது?

கடல் குடிக்க விரும்பிய கம்பப் பூனை போல...

இரண்டு சிக்கல்கள்:
1. எல்லாத் திருக்குறளும் ஹைக்கூவிற்கானவை அல்ல! (காமத்துப்பால் குறள்கள் அழகாக பொருந்தும் என்று தோன்றுகிறது! பொ.இ.பார்ப்போம்!)

2. ஹைக்கூ என்பது நம்ம ஊர் கவிஞர்களால் சரியாக புரிந்துகொள்ளப் படாத ஒன்று (என் கருத்தில், ஆங்கிலம் மூலம் நமக்கு அறிமுகமானதால் இச்சிக்கல்!)

ஹைக்கூ எதையும் சொல்லாது, எதையும் குறிப்பிடாது... அது ஒரு காலமற்ற காட்சியின் சொற்பிடிப்பு, அவ்வளவே (சமுதாயச் சாடல்கள், ‘அடடே ஆச்சரியக்குறி’க்கள் எல்லாம் சென்றியூ எனப்பட வேண்டும்!)

இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் நான் இதில் கால் வைக்கிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

ஒரு முதலடியாக மூன்று அடிகளில், சொற்சுருக்கங்களில் திருக்குறள்களைச் சொல்லிப் பார்ப்போம்... ஆங்... முக்கியமாய் எளிமையாய்! பத, பொழிப்பு, விளக்க உரைகள் தேவைப்படா வண்ணம்!

1330-இல் ஒரு நூறாவது நல்ல ஹைக்கூவாக (அல்லது சென்றியூவாகத்) தேறும் என்பது என் நம்பிக்கை (சிக்கல் வள்ளுவரில் அல்ல, என்னிடமே!)

இதை இப்படிப் போட்டால் இன்னும் நல்லாருக்குமே’ வரவேற்கப்படுகின்றன...

4 comments:

  1. எட்டு குணங்கள் எவையெவை என்பதற்குதான் உரை அவசியம்... அதை மீண்டும் நான் அதை எட்டு குணங்கள் என்றே மொழிவது சரியா ஆசிரியரே !

    ReplyDelete
    Replies
    1. சரியில்லைதான்... ’ஹைக்கூ உரை இருக்கிறதா’ என்று அத்தோழி கேட்டதாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்... ஆனால், ஹைக்கூ உரையாக இவற்றை இயற்றவில்லை... இயற்றவும் இயலாது... இது புதிய மொந்தையில் பழைய கள் - அவ்வளவே! :-) கருத்துக்கு நன்றிகள் பல...

      Delete