இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 19 February, 2017

ஹைக்குறள் #109 தகையணங்குறுத்தல்

காமத்துப்பால் / அதிகாரம் 109 / தகையணங்குறுத்தல்

#haiKural

தேவதையோ? மயிலோ?
பெண்தானோ? மயங்குகிறது
பாவம் என் நெஞ்சு! (1081)

பாவையவள் பார்க்கும்
பார்வைக்கெதிர் பார்வை
தேவதை செய்யும் போர்! (1082)

எமன் என்பதை
இன்றுதான் அறிந்தேன்,
இமைக்கும் அகல விழி! (1083)

அறியாப் பெண்ணென்று
அறியாமல் பார்ப்பவரின்
உயிர் உண்ண உள்ளன கண்! (1084)

எமனா? மானா?
விழிதானா? இவட்குச்
சமமாய் மூன்றுமே அது! (1085)

புருவக் கேடயத்தால்
இவள் விழி அம்புகள்
உருவவில்லை என் உயிரை! (1086)

முட்டும் யானையின்
முகப்படாம் போலிவள்
கட்டுக்கடங்காததின் கச்சு! (1087)

வெற்றியே சுவைத்தவென்
வீரமும் தோற்றது
நெற்றியின் ஒளி கண்டு! (1088)

மான் விழியும்
நாண் நகையும் மீறி
வீண் அணிகள் ஏன்? (1089)

பார்த்தவுடன் போதைதரும்
காதல்போல் வருமா?
நீர்த்துவிடும் மது! (1090)

2 comments:

  1. நனி நன்றி... (குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைச் சுட்டிக்காட்டி இன்னும் சற்றே விரிவாய் கருத்துரைத்தால் மேலும் உதவியாய் இருக்கும்... ஒரு வேண்டுதல்தான், உங்கள் நேர வசதிப்படி செய்க! நன்றி!)

    ReplyDelete