காமத்துப்பால் / அதிகாரம் 109 / தகையணங்குறுத்தல்
#haiKural
தேவதையோ? மயிலோ?
பெண்தானோ? மயங்குகிறது
பாவம் என் நெஞ்சு! (1081)
பாவையவள் பார்க்கும்
பார்வைக்கெதிர் பார்வை
தேவதை செய்யும் போர்! (1082)
எமன் என்பதை
இன்றுதான் அறிந்தேன்,
இமைக்கும் அகல விழி! (1083)
அறியாப் பெண்ணென்று
அறியாமல் பார்ப்பவரின்
உயிர் உண்ண உள்ளன கண்! (1084)
எமனா? மானா?
விழிதானா? இவட்குச்
சமமாய் மூன்றுமே அது! (1085)
புருவக் கேடயத்தால்
இவள் விழி அம்புகள்
உருவவில்லை என் உயிரை! (1086)
முட்டும் யானையின்
முகப்படாம் போலிவள்
கட்டுக்கடங்காததின் கச்சு! (1087)
வெற்றியே சுவைத்தவென்
வீரமும் தோற்றது
நெற்றியின் ஒளி கண்டு! (1088)
மான் விழியும்
நாண் நகையும் மீறி
வீண் அணிகள் ஏன்? (1089)
பார்த்தவுடன் போதைதரும்
காதல்போல் வருமா?
நீர்த்துவிடும் மது! (1090)
#haiKural
தேவதையோ? மயிலோ?
பெண்தானோ? மயங்குகிறது
பாவம் என் நெஞ்சு! (1081)
பாவையவள் பார்க்கும்
பார்வைக்கெதிர் பார்வை
தேவதை செய்யும் போர்! (1082)
எமன் என்பதை
இன்றுதான் அறிந்தேன்,
இமைக்கும் அகல விழி! (1083)
அறியாப் பெண்ணென்று
அறியாமல் பார்ப்பவரின்
உயிர் உண்ண உள்ளன கண்! (1084)
எமனா? மானா?
விழிதானா? இவட்குச்
சமமாய் மூன்றுமே அது! (1085)
புருவக் கேடயத்தால்
இவள் விழி அம்புகள்
உருவவில்லை என் உயிரை! (1086)
முட்டும் யானையின்
முகப்படாம் போலிவள்
கட்டுக்கடங்காததின் கச்சு! (1087)
வெற்றியே சுவைத்தவென்
வீரமும் தோற்றது
நெற்றியின் ஒளி கண்டு! (1088)
மான் விழியும்
நாண் நகையும் மீறி
வீண் அணிகள் ஏன்? (1089)
பார்த்தவுடன் போதைதரும்
காதல்போல் வருமா?
நீர்த்துவிடும் மது! (1090)
நனி நன்று!
ReplyDeleteநனி நன்றி... (குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைச் சுட்டிக்காட்டி இன்னும் சற்றே விரிவாய் கருத்துரைத்தால் மேலும் உதவியாய் இருக்கும்... ஒரு வேண்டுதல்தான், உங்கள் நேர வசதிப்படி செய்க! நன்றி!)
ReplyDelete