கடந்த மாதம் காஸ்ட்ரோ பற்றிய நூலைப் படித்துவிட்டு எனக்குத் தோன்றிய கவிதையை இடுகை இட்டிருந்தேன், அதற்கு வெகு நாள்களுக்கு முன்னரே நான் படித்த நூல் “சே குவேரா - வேண்டும் விடுதலை” ஆகும். கிழக்குப் பதிபகத்தையும், மருதனையும் எனக்கு அறிமுகப் படுத்திய நூல் இதுவே, சே-வின் வாழ்வைக் கற்கும் ஆவலில் வாங்கிய நூல் மிகச் சிறந்த ஒரு பதிபகத்தையும் ஆசிரியரையும் எனக்கு அறிமுகப்படுத்தியது ஒருவித “போனஸ்” என்றே மகிழ்ந்தேன்...
சே-வின் வாழ்வை படித்ததும் தோன்றிய வரிகளே கீழே உள்ளவை... படித்துத் தங்கள் கருத்தினையும் இடுங்கள்... நன்றி...
அர்ஜென்டீனனாய் பிறந்தாய்
அகிலனாய் தான் வாழ்ந்தாய்,
லத்தீன்-அமெரிக்க விடுதலை என்னும்
லட்சியம் கொண்டே செயல்பட்டாய்,
ஆன்மாவை மட்டுமல்ல நீ
ஆஸ்துமாவையும் வென்றாய்,
புரட்சியென்னும் ஆயுதம் கொண்டு
புரட்டிப் போட்டாய் ஏகாதிபத்தியத்தை,
காஸ்ட்ரோ காட்டிய பாதை சென்று
கம்யூனிசம் நிறுவினாய் க்யூபாவில்,
அண்டைவீடு அமெரிக்காவின்
அடிவயிற்றில் புளிகரைத்தாய்,
சீ.ஐ.ஏ-வை சீண்டி விளையாடினாய்
சீறும் அப்பாம்பின் நாவறுத்தாய்,
சோவியத்துடன் கை கோர்த்து
சோசியலிசம் தனை விதைத்தாய்,
கல்வி, ஆலை, புரட்சி தந்து
கட்டமைத்தாய் க்யூபாவை,
நின்றதா நின் கனவு அத்தோடு?
நீண்டதேயது காங்கோ, பொலிவியா என்று!
வீணரால் கொல்லப்பட்டு இறக்கவில்லை நீயே
வீரனுக்கு என்றும் மரணமில்லையே, சே!
நூல்விவரம் :
பெயர் : சே குவேரா - வேண்டும் விடுதலை
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு
குறிசொற்கள்
கவிதை
(39)
மரபுக்கவிதை
(25)
வெண்பா
(17)
ஆண்டாள்
(16)
மாணிக்கவாசகர்
(16)
மார்கழி
(16)
வாழ்க்கை
(14)
காதல்
(12)
தமிழ்
(12)
காலம்
(6)
விருத்தம்
(5)
ஹைக்கூக்கள்
(5)
நட்பு
(4)
பாரதியார்
(4)
சிந்து
(3)
திருக்குறள்
(3)
பண்டிகை
(3)
மிறைகவி
(3)
வாழ்த்து
(3)
ஆசிரியப்பா
(2)
கதைப்பாடல்
(2)
சிறுகதை
(2)
திரைப்படம்
(2)
பாசம்
(2)
விமர்சனம்
(2)
Farewell Poem
(1)
Friendship Poem
(1)
அரசியல்
(1)
இடையினப்பா
(1)
இரங்கற்பா
(1)
இரதபந்தம்
(1)
கண்ணதாசன்
(1)
கண்ணன்
(1)
கலிவெண்பா
(1)
கவியரங்கம்
(1)
கிராமம்
(1)
கிருஷ்ண
(1)
கூடசதுர்த்தம்
(1)
சதுரபந்தம்
(1)
சிலேடை
(1)
ஜெயலலிதா
(1)
தமிழ்ப் படம்
(1)
திரை விமர்சனம்
(1)
நாகபந்தம்
(1)
நான்காரைச் சக்கரபந்தம்
(1)
நாற்கூற்றிருக்கை
(1)
நிரோட்டகம்
(1)
நூல்
(1)
பின்பி
(1)
பொங்கல்
(1)
மகாபாரதம்
(1)
மடக்கணி
(1)
மழை
(1)
மாலைமாற்று
(1)
மெல்லினப்பா
(1)
மொழிபெயர்ப்பு
(1)
யமகம்
(1)
வஞ்சி விருத்த
(1)
வல்லினப்பா
(1)
வினாவுத்திரம்
(1)
ஷேக்சுபியர்
(1)
(கா) விஜயநரசிம்மன் 2007-2021
இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)
கவியாக்கம் சிறப்பாக இருக்கிறது நண்பா.
ReplyDelete