இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 17 June, 2010

தோழிக்குத் திருமண வாழ்த்து

மு.கு: காதல் கவிதை என்று கிறுக்கியதற்கு அடுத்த படினிலையாய் அமைந்தது இதுதான். இதை எழுத தேவைப்பட்ட துணிவைவிட எழுதியபின் பரிசாக இதையே தர நிறைய துணிவு தேவைப்பட்டது என்பதை இங்கே ஒத்துக்கொள்கிறேன். நான் அறிந்த வரையில் என் முதல் மரபு கவிதையும் இதில் உள்ள கடவுள், மொழி வாழ்த்துப் பாக்கள்தான் [விருத்தங்கள்]

கடவுள் வாழ்த்து

நம்பிக்கை யான்நலம் காக்கும் களிற்நாயகன்
தம்பிக்கும் தன்தயைக் கூர்ந்த எழின்நாயகன்
தும்பிக்கை யால்புவி காத்துப் பொலிர்நாயகன்
எம்பிறப்பும் நம்மைக் காப்பான் நல்விநாயகன்.

மொழி வாழ்த்து

பொதிகையிடை பிறந்து குறுமுனி
தாலெனும் தொட்டிலிலே தவழ்ந்தாள்
சதியொரு பாகம் பெற்றான்
மற்றவன் குமரனொடும் வளர்ந்தாள்
நதியுரும் நாவலர் நாட்டில்
நற்செங் கோலது வீச்சுவாள்
கதிதரும் தாயவள் நமக்கே
தமிழன்னை நற்றாள் போற்றி!

மணவாழ்த்து

கல்யாணப் பந்தல் புகும்
கனிவான என் தோழி,
கற்பகக் கோடியாண்டு நின்
செம் மஞ்சள் வாழி!

கன்னியெனும் ஆடை மாற்றி
கணவன் கொள்ளும் தோழி,
காலமெல்லாம் அவன் காதல்போற்ற
நின் சீற்கற்பு வாழி!

மன்னவன்தன் குலமேற்று குடியேற்று
விளக்கேற்ற  செல்லும் தோழி,
கொண்டவன்பால் கொண்ட அன்பால்
உயிரேற்றும் நின்அன்பு வாழி!

புரிதல் என்பது இருவழிப்பாதை
புரிந்துக் கொள்வாய் தோழி,
கொடுத்து வாங்கும் கொள்கை
கொண்டே சீறாய்நீ வாழி!

பெற்றார் உற்றார் சுற்றார்
வாழ்த்தப் பெறும் தோழி,
கற்றார் கடந்தார் போற்றும் நற்றாள்
நாதனும் வாழ்த்தநீ வாழி!

(படித்தமைக்கு நன்றி, மறக்காமல் தங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், அதற்கும் முன்னரே நன்றி...)

No comments:

Post a Comment