முன்குறிப்பு : என் காதலி பாண்டிய நாட்டவள் (மதுரை), நான் தொண்டை நாட்டவன் (சென்னை) - அவள் தன் ஊருக்கு போயிருந்த சமயம், வந்த பாடல் இது! மழைத்துளிகளைச் சேகரிக்கும் சிறுவன் போல எங்கிருந்தோ பொழிந்த சொற்களை பேனா மூலம் ஒரு வெள்ளைத் தாளில் சேகரித்த பணி மட்டுமே என்னுடையது!
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility”
-என்று வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னதன் உண்மையை புரிந்த நொடி அது!
மதுரைக்குச் சென்றாயே பெண்ணே
மதுவிறைக்கும் நின்தாமரைக் கண்ணே!
தொண்டைநாடன் எனைவிட்டாய் தனியே
பாண்டி-
கெண்டைவிழி என்றுகாண்பேன் இனியே?
மீனாட்சி கோவுறையும் பதியில்
மீன்ஆட்சிக் கோலுறைந்த கதியில்
தானாட்சி புரிந்திடுமோ கண்கள்
என்னை-
ஏனாட்சி செய்கிறதுன் பெண்-கள்!
சேமறையும் வேளைவரும் கூடல்நிலா
தாமரையும் தானும்சேர்ந்து போகுமுலா
மல்லிகைதன் மணம்பரவும் மாநகரில்
உந்தன்-
அல்லிகைபற்றி அலையும்சுகம் நிகரில்!
பாவையுன் விழிபார்த்து நாணும்
பாண்டியன்தன் கொடிவாழும் மீனும்!
சொல்லாத சுகமெல்லாம் ஈணும்
நிந்தன்-
சொல்லாலே சொக்கிநின்றேன் நானும்!
சொக்கனுக்கு சொந்தமான வானும்
சொர்க்கமுன்மேல் மழைதூவ வேணும்,
கூடல்நகர் கூடிநின்று காணும்
இந்தக்-
கூரழகை கைக்கொள்வேன் நானும்!
முத்தெடுத்த பாண்டியமா கோவும்
நின்பல்லழகை பார்த்ததில்லை பாவம்!
கல்வடித்த பல்லவன்நான் மேவும்
உற்ற-
நல்லழகே மனமுன்பால் தாவும்!
முப்படையால் உலகம்கொண்டான் சோழன்
முத்தமிடும் இதழ்படைக்கு நானே தோழன்,
வில்கொண்டான் படைகொடியில் சேரன்
அவன்-
கல்லாத கலையிடையில் கற்பேன் பாரேன்!
தமிழென்பாள் நான்கொண்ட அன்னை
தவறாமலெனக் கருள்வாள் அவள் உன்னை
நீயின்றி நானில்லை என்னை?
எந்தன்-
உயிரே நீ ஏற்பாயோ என்னை!
(பாடலின் யாப்பைப் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி! )
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility”
-என்று வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னதன் உண்மையை புரிந்த நொடி அது!
மதுரைக்குச் சென்றாயே பெண்ணே
மதுவிறைக்கும் நின்தாமரைக் கண்ணே!
தொண்டைநாடன் எனைவிட்டாய் தனியே
பாண்டி-
கெண்டைவிழி என்றுகாண்பேன் இனியே?
மீனாட்சி கோவுறையும் பதியில்
மீன்ஆட்சிக் கோலுறைந்த கதியில்
தானாட்சி புரிந்திடுமோ கண்கள்
என்னை-
ஏனாட்சி செய்கிறதுன் பெண்-கள்!
சேமறையும் வேளைவரும் கூடல்நிலா
தாமரையும் தானும்சேர்ந்து போகுமுலா
மல்லிகைதன் மணம்பரவும் மாநகரில்
உந்தன்-
அல்லிகைபற்றி அலையும்சுகம் நிகரில்!
பாவையுன் விழிபார்த்து நாணும்
பாண்டியன்தன் கொடிவாழும் மீனும்!
சொல்லாத சுகமெல்லாம் ஈணும்
நிந்தன்-
சொல்லாலே சொக்கிநின்றேன் நானும்!
சொக்கனுக்கு சொந்தமான வானும்
சொர்க்கமுன்மேல் மழைதூவ வேணும்,
கூடல்நகர் கூடிநின்று காணும்
இந்தக்-
கூரழகை கைக்கொள்வேன் நானும்!
முத்தெடுத்த பாண்டியமா கோவும்
நின்பல்லழகை பார்த்ததில்லை பாவம்!
கல்வடித்த பல்லவன்நான் மேவும்
உற்ற-
நல்லழகே மனமுன்பால் தாவும்!
முப்படையால் உலகம்கொண்டான் சோழன்
முத்தமிடும் இதழ்படைக்கு நானே தோழன்,
வில்கொண்டான் படைகொடியில் சேரன்
அவன்-
கல்லாத கலையிடையில் கற்பேன் பாரேன்!
தமிழென்பாள் நான்கொண்ட அன்னை
தவறாமலெனக் கருள்வாள் அவள் உன்னை
நீயின்றி நானில்லை என்னை?
எந்தன்-
உயிரே நீ ஏற்பாயோ என்னை!
(பாடலின் யாப்பைப் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி! )
நல்ல கவிதை விஜய்! வாழ்த்துகள்!
ReplyDelete