கண்டுகொள்ள ஆளின்றி கதியிழந்து நிற்கின்றான்
பண்டு உலகளந்த பாவப்பட்ட தமிழன்,
வாழ வந்தார்க்கு வாழை இலைபோட்டான்
பாழும் தமிழனுக்குப் பசியாற்ற வழியில்லை!
அடுத்தடுத்து இங்கே அணுவுலைகள் கட்ட,
நடுவயலில் எண்ணெய் நகர்குழாய்கள் போட
நடுவண் அரசிடமே ‘நல்லதிட்டம்’ பலவுண்டு,
படுபாவித் தமிழன் படிந்திட மறுக்கின்றான்!
தண்ணீரும் கல்வியும் தானா முக்கியம்?
விவசாயம் செய்து வீணாகப் போவதேன்?
நேற்று வந்ததெலாம் ‘நேஷனல் லாங்குவேஜ்’ஆம்
தோற்றமுதல் உள்ளதமிழ் தொய்ந்திட்ட பொய்யாம்!
தரணியில் முதல்மாந்தன் தமிழனென்றே சாற்ற
வருகின்ற ஆய்வெல்லாம் மறைக்கப்படு வதுமேன்?
என்னத்தான் செய்துவிட்டான் ஏமாளித் தமிழன்?
முன்வந்து பண்பட்ட முழுக்குற்றம் ஒன்றே!
கறுப்பன் தந்ததே கலாச்சாரம் என்றால்
வெறுப்பு வருகிறதோ வெள்ளைத் தோலர்க்கு?
தமிழனுக்குக் காவிரியைத் தரச்சொன்ன தீர்ப்பை
மதியாமல் ஆங்கவர் அணைமூடிக் கொண்டார்
அதுகேட்க ஆளில்லை ஆனால் தமிழனுக்கு
எதிரான தீர்ப்பென்றால் எப்படியும் நிறைவேறும்
நாட்டுக் காளைகளை நாசமாக்க விழையும்
பீட்டாக்கே வளையுதுநம் பீனல் கோடுகளும்!
நம்கையைக் கொண்டே நம்கண்ணை குத்தும்
தந்திரங்கள் கற்று தரணி அடக்குகின்றார்...
பொங்கள் வாழ்த்தொன்று புனையத்தான் எண்ணம்
பொங்கி எரிமனத்தில் பூப்பூப்பது எங்ஙனம்?
தெறித்து எரிமனத்தில் தேன்வந்தா ஊறும்?
போகட்டும் போகியொடு பொல்லாப்பு எல்லாம்
ஆகட்டும் விடியல் அமைந்ததொரு தைமுதலாய்...
பண்டு உலகளந்த பாவப்பட்ட தமிழன்,
வாழ வந்தார்க்கு வாழை இலைபோட்டான்
பாழும் தமிழனுக்குப் பசியாற்ற வழியில்லை!
அடுத்தடுத்து இங்கே அணுவுலைகள் கட்ட,
நடுவயலில் எண்ணெய் நகர்குழாய்கள் போட
நடுவண் அரசிடமே ‘நல்லதிட்டம்’ பலவுண்டு,
படுபாவித் தமிழன் படிந்திட மறுக்கின்றான்!
தண்ணீரும் கல்வியும் தானா முக்கியம்?
விவசாயம் செய்து வீணாகப் போவதேன்?
நேற்று வந்ததெலாம் ‘நேஷனல் லாங்குவேஜ்’ஆம்
தோற்றமுதல் உள்ளதமிழ் தொய்ந்திட்ட பொய்யாம்!
தரணியில் முதல்மாந்தன் தமிழனென்றே சாற்ற
வருகின்ற ஆய்வெல்லாம் மறைக்கப்படு வதுமேன்?
என்னத்தான் செய்துவிட்டான் ஏமாளித் தமிழன்?
முன்வந்து பண்பட்ட முழுக்குற்றம் ஒன்றே!
கறுப்பன் தந்ததே கலாச்சாரம் என்றால்
வெறுப்பு வருகிறதோ வெள்ளைத் தோலர்க்கு?
தமிழனுக்குக் காவிரியைத் தரச்சொன்ன தீர்ப்பை
மதியாமல் ஆங்கவர் அணைமூடிக் கொண்டார்
அதுகேட்க ஆளில்லை ஆனால் தமிழனுக்கு
எதிரான தீர்ப்பென்றால் எப்படியும் நிறைவேறும்
நாட்டுக் காளைகளை நாசமாக்க விழையும்
பீட்டாக்கே வளையுதுநம் பீனல் கோடுகளும்!
நம்கையைக் கொண்டே நம்கண்ணை குத்தும்
தந்திரங்கள் கற்று தரணி அடக்குகின்றார்...
பொங்கள் வாழ்த்தொன்று புனையத்தான் எண்ணம்
பொங்கி எரிமனத்தில் பூப்பூப்பது எங்ஙனம்?
தெறித்து எரிமனத்தில் தேன்வந்தா ஊறும்?
போகட்டும் போகியொடு பொல்லாப்பு எல்லாம்
ஆகட்டும் விடியல் அமைந்ததொரு தைமுதலாய்...
வேதனை
ReplyDelete